Kandha Sasti Kavasam Lyrics in Tamil – Aanmeegam

Kantha Sashti Kavasam

Kandha Sasti Kavasam Lyrics in Tamil


கந்தர் சஷ்டி கவசம்

காப்பு

துதிப்போர்க்கு வல்வினைபோம், துன்பம்போம்; நெஞ்சில்
பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் – கதித்து ஓங்கும்;
நிஷ்டையுங்கைகூடும்; நிமலர் அருள் கந்தர்
சஷ்டி கவசந்தனை.

நூல்

அமரர் இடர் தீர அமரம் புரிந்த
குமரன் அடி நெஞ்சே குறி..

சஷ்டியைநோக்கச்சரவணபவனார்
சிஷ்டருக்குதவுஞ்செங்கதிர் வேலோன்
பாதமிரண்டில்பன்மணிச் சதங்கை
கீதம் பாடக்கிண்கிணியாட
மையல் நடஞ்செய்யும் மயில் வாகனனார்

கையில் வேலாலெனைக்காக்கவென்று உவந்து
வரவரவேலாயுதனார்வருக !
வருக ! வருக! மயிலோன்வருக!
இந்திரன்முதலாவெண்டிசைபோற்ற
மந்திரவடிவேல்வருக! வருக!

வாசவன்மருகா! வருக! வருக!
நேசக்குறமகள்நினைவோன்! வருக!
ஆறுமுகம் படைத்த ஐயா! வருக!
நீறிடும்வேலவன் நித்தம் வருக!
சிரகிரிவேலவன் சீக்கிரம் வருக!

சரஹணபவனார் சடுதியில் வருக!
ரஹணபவச, ரரரரரரர
ரிஹணபவச,ரிரிரிரிரிரிரி
விணபவசரஹணவீராநமோ நம!
நிபவசரஹணநிறநிறநிறென

வசரஹணபவருகவருக!
அசுரர் குடிகெடுத்த ஐயா! வருக!
என்னை யாளும்இளையோன்கையில்

பன்னிரண்டாயுதம்பாசாங்குசமும்
பரந்த விழிகள்பன்னிரண்டிலங்க

விரைந்தெனைக் காக்க வேலோன்வருக !
ஐயும் கிலியும்அடைவுடன்சௌவும்,
உய்யொளிசௌவும், உயிரையுங்கிலியும்,
கிலியுஞ்சௌவும், கிளரொளியையும்
நிலைபெற்றென்முன் நித்தமும் ஒளிரும்

சண்முகன் தீயும் தனி ஓளியொவ்வும்
குண்டலியாஞ்சிவகுகன் தினம் வருக !
ஆறு முகமும், அணிமுடிஆறும்
நீறிடுநெற்றியும். நீண்ட புருவமும்,
பன்னிருகண்ணும், பவளச்செவ்வாயும்,

நன்னெறி நெற்றியில் நவமணிச்சுட்டியும்,
ஈராறுசெவியில்இலகுகுண்டலமும்
ஆறிருதிண்புயத்தழகிய மார்பில்
பல்பூஷணமும்பதக்கமும் தரித்து
நன்மணிபூண்டநவரத்னமாலையும்

முப்புரிநூலும், முத்தணி மார்பும்
செப்பழகுடையதிருவயிறுந்தியும்,
துவண்டமருங்கில்சுடரொளிப்பட்டும்,
நவரத்னம்பதித்தநற்சீராவும்,
இருதொடை அழகும், இணைமுழந்தாளும்,

திருவடி யதனில்சிலம்பொலி முழங்க
செககணசெககணசெககணசெகண
மொகமொகமொகமொகமொகமொகமொகென
நகநகநகநகநகநகநகென
டிகுகுணடிகுடிகு, டிகுகுணடிகுண

ரரரரரரரர,ரரரரரரரர
ரிரிரிரிரிரிரிரிரிரிரிரி,ரிரிரி
டுடுடுடுடுடுடுடு,டுடுடுடுடுடுடு
டகுடகுடிகுடிகு, டங்குடிங்குகு
விந்து விந்து, மயிலோன் விந்து

முந்து முந்து,முருகவேள் முந்து
என்றனை ஆளும் ஏரகச்செல்வ !
மைந்தன் வேண்டும் வரமகிழ்ந்துதவும்
லாலாலாலாலாலாவேசமும்
லீலாலீலாலீலாவிநோதனென்று,

உன்திருவடியைஉறுதியென்றெண்ணும்
என்தலைவைத்துன்இணையடி காக்க!
என்னுயிர்க்குயிராம்இறைவன் காக்க!
பன்னிருவிழியால்பாலனைக் காக்க!
அடியேன் வதனம்அழகுவேல் காக்க!

பொடிபுனைநெற்றியைப்புனிதவேல் காக்க!
கதிர்வேல்இரண்டும்கண்ணினைக் காக்க!
விதிசெவிஇரண்டும்வேலவர் காக்க!
நாசிகள்இரண்டும்நல்வேல் காக்க!
பேசிய வாய்தனைப்பெருவேல் காக்க!

முப்பத்திருபல்முனைவேல் காக்க!
செப்பியநாவைச்செவ்வேல் காக்க!
கன்னமிரண்டும்கதிர்வேல் காக்க!
என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க!
மார்பை இரத்னவடிவேல் காக்க!

சேரிளமுலைமார்திருவேல் காக்க!
வடிவேலிருதோள்வளம்பெறக் காக்க!
பிடரிகளிரண்டும்பெருவேல் காக்க!
அழகுடன் முதுகை அருள்வேல் காக்க!
பழுபதினாறும்பருவேல் காக்க!

வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க!
சிற்றிடைஅழகுறச்செவ்வேல் காக்க!
நாணாங்கயிற்றைநல்வேல் காக்க!
ஆண்பெண்குறிகளைஅயில்வேல் காக்க!
பிட்டமிரண்டும்பெருவேல் காக்க!

வட்டக்குதத்தைவல்வேல் காக்க!
பணைத்தொடைஇரண்டும்பருவேல் காக்க!
கணைக்கால்முழந்தாள்கதிர்வேல் காக்க!
ஐவிரல் அடியினைஅருள்வேல் காக்க!
கைகளிரண்டும்கருணைவேல் காக்க!

முன்கையிரண்டும்முரண்வேல் காக்க!
பின்கையிரண்டும் பின்னவள் இருக்க!
நாவில் சரஸ்வதி நற்றுணையாக,
நாபிக் கமலம், நல்வேல் காக்க!
முப்பால்நாடியைமுனைவேல் காக்க!

எப்பொழுதும் எனைஎதிர்வேல் காக்க!
அடியேன் வசனம் அசைவுள நேரம்
கடுகவே வந்து, கனகவேல் காக்க!
வரும்பகல்தன்னில்வச்சிரவேல் காக்க!
அரையிருள் தன்னில்அனையவேல் காக்க!

ஏமத்தில், சாமத்தில், எதிர்வேல் காக்க!
தாமதம் நீக்கிச்சதுர்வேல் காக்க!
காக்க காக்கக்கனகவேல் காக்க!
நோக்க நோக்க நொடியில் நோக்க!
தாக்க தாக்கத் தடையறத் தாக்க!

பார்க்கபார்க்கப் பாவம் பொடிபட,
பில்லி சூனியம் பெரும்பகை அகல,
வல்ல பூதம், வலாட்டிகப்பேய்கள்,
அல்லற்படுத்தும்அடங்காமுனியும்
பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும்

கொள்ளிவாய்ப்பேய்களும், குறளைப்பேய்களும்,
பெண்களைத் தொடரும் பிரம்மராட்சதரும்
அடியனைக் கண்டால் அலறிக்கலங்கிட!
இரிசிகாட்டேரிஇத்துன்பசேனையும்
எல்லிலும்இருட்டிலும், எதிர்படும்அண்ணரும்,

கனபூசை கொள்ளும் காளியோடு அனைவரும்,
விட்டாங்காரரும், மிகுபலபேய்களும்
தண்டியக்காரரும், சண்டாளர்களும்
என்பெயர் சொல்லவும் இடிவிழுந்தோடிட,
ஆனை அடியினில், அரும்பாவைகளும்

பூனை மயிரும், பிள்ளைகள்என்பும்,
நகமும்மயிரும், நீள் முடி மண்டையும்
பாவைகளுடனே, பலகலசத்துடன்
மனையிற்புதைத்த வஞ்சனை தனையும்,
ஒட்டிய செருக்கும்ஒட்டியப்பாவையும்,

காசும், பணமும், காவுடன்சோறும்,
ஓதும் அஞ்சனமும், ஒரு வழிப்போக்கும்,
அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட,
மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட,
காலதூதாளெனைக்கண்டாற்கலங்கிட,

அஞ்சி நடுங்கிட, அரண்டு புரண்டிட,
வாய்விட்டலறி, மதிகெட்டோட,
படியினில்முட்டப், பாசக்கயிற்றால்
கட்டுடன் அங்கம் கதறிடக் கட்டு!
கட்டி உருட்டு, கால்கை முறிய

கட்டு கட்டு, கதறிடக் கட்டு!
முட்டு முட்டு, முழிகள் பிதுங்க
செக்கு செக்கு செதில் செதிலாக;
சொக்குச் சொக்கு; சூர்ப்பகைச் சொக்கு;
குத்துகுத்துகூர்வடிவேலால்;

பற்றுபற்று பகலவன் தணலெரி;
தணலெரிதணலெரி, தணலதுவாக;
விடுவிடு வேலை, வெருண்டதுஒடப்;
புலியும்நரியும், புன்னரிநாயும
எலியும் கரடியும், இனித்தொடர்ந்தோடத்,

தேளும், பாம்பும், செய்யான்பூரான்,
கடிவிடவிஷங்கள்கடித்துயரங்கம்
ஏறியவிஷங்கள்எளிதுடன் இறங்க,
ஒளிப்புஞ்சுளுக்கும், ஒருதலை நோயும்
வாதஞ்சயித்தியம்வலிப்புப் பித்தம்

சூலைசயம்குன்மம்சொக்குச் சிரங்கு
குடைச்சல் சிலந்தி குடல்விப்புரிதி
பக்கப் பிளவை, படர்தொடை வாழை,
கடுவன் , படுவன், கைத்தாள் சிலந்தி,
பற்குத்தரணை, பருவரையாப்பும்,

எல்லாப்பிணியும், என்றனைக் கண்டால்
நில்லாது ஓட, நீ எனக்கு அருள்வாய்!
ஈரேழ்உலகமும், எனக்கு உறவாக
ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா,
மண்ணாள்அரசரும் மகிழ்ந்து உறவாகவும்,

உன்னைத் துதிக்க, உன் திருநாமம்
சரஹணபவனே! சையொளிபவனே!
திரிபுரபவனே! திகழொளிபவனே!
பரிபுரபவனே! பவமொழிபவனே!
அரிதிருமருகா! அமராபதியைக்

காத்துத்தேவர்கள்கடுஞ்சிறைவிடுத்தாய்!
கந்தா ! குகனே! கதிர் வேலவனே!
கார்த்திகை மைந்தா! கடம்பா! கடம்பனை,
இடும்பனைஅழித்தஇனியவேல்முருகா
தணிகாசலனே ! சங்கரன் புதல்வா!

கதிர்காமத்துறைகதிர்வேல்முருகா,
பழநிபதிவாழ்பாலகுமாரா!
அவினன்குடிவாழ் அழகிய வேலா!
செந்தின்மாமலையுறும்செங்கல்வராயா!
சமராபுரிவாழ்சண்முகத்தரசே!

காரார்குழலாள் கலைமகள், நன்றாய்
என்நாஇருக்க, யானுனைப் பாட,
என்னைத்தொடர்ந்திருக்கும் எந்தை முருகனைப்
பாடினேன் ஆடினேன், பரவசமாக;
ஆடினேன் நாடினேன்; ஆவினன்பூதியை

நேசமுடன்யான் நெற்றியில் அணியப்,
பாசவினைகள்பற்றது நீங்கி,
உன்பதம்பெறவே, உன்னருளாக
அன்புடன் இரட்சி; அன்னமுஞ்சொன்னமும்
மெத்தமெத்தாக, வேலாயுதனார்

சித்திபெற்றடியேன் சிறப்புடன் வாழ்க!
வாழ்கவாழ்கமயிலோன்வாழ்க!
வாழ்கவாழ்கவடிவேல்வாழ்க!
வாழ்கவாழ்கமலைக்குருவாழ்க!
வாழ்கவாழ்கமலைக்குற மகளுடன்

வாழ்கவாழ்கவாரணத்துவசம்!
வாழ்கவாழ்க என் வறுமைகள் நீங்க,
எத்தனை குறைகள், எத்தனை பிழைகள்,
எத்தனை அடியேன் எத்தனை செயினும்
பெற்றவன் நீகுருபொறுப்பது உன் கடன்:

பெற்றவள் குறமகள், பெற்றவளாமே!
பிள்ளை யென்றன்பாய்ப் பிரியமளித்து,
மைந்தனென்மீதுன்மனமகிழ்ந்துஅருளித்
தஞ்சமென்றடியார்தழைத்திடஅருள்செய்!
கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய

பாலன்தேவராயன்பகர்ந்ததைக்
காலையில் மாலையில் கருத்துடன், நாளும்
ஆசாரத்துடன் அங்கம் துலக்கி,
நேசமுடனொருநினைவதுவாகிக்
கந்தர் சஷ்டிகவசம் இதனைச்

சிந்தை கலங்காதுதியானிப்பவர்கள்,
ஒருநாள் முப்பத்தாறுஉருக் கொண்டு,
ஓதியேசெபித்துஉகந்து நீறு அணிய,
அஷ்டதிக்குள்ளோர்அடங்கலும்வசமாய்த்
திசைமன்னர் எண்மர் சேர்ந்தங்குஅருளுவர்;

மாற்றலர் எல்லாம் வந்துவணங்குவர்;
நவகோள் மகிழ்ந்து நன்மை அளித்திடும்;
நவமதன் எனவும் நல்லெழில்பெறுவர்
எந்த நாளும் ஈரெட்டாய்வாழ்வர்;
கந்தர்கைவேலாம்கவசத்தடியை

வழியாய்க் காண மெய்யாய் விளங்கும்;
விழியால் காண வெருண்டிடும்பேய்கள்;
பொல்லாதவரைப் பொடிப் பொடி யாக்கும்;
நல்லோர் நினைவில் நடனம் புரியும்;
சர்வ சத்துரு சங்காரத்தடி

அறிந்தெனதுள்ளம், அஷ்டலட்சுமிகளில்
வீர லட்சுமிக்குவிருந்துணவாகச்
சூரபத்மாவைத்துணித்தகையதனால்,
இருபத்தேழ்வர்க்குவந்தமுதுதளிந்த
குருபரன், பழநிக்குன்றினிலிருக்கும்

சின்னக் குழந்தை சேவடி போற்றி!
எனைத்தடுத்தாட்கொள, என்றனதுள்ளம்
மேவியவடிவுறும்வேலவா போற்றி!
தேவர்கள்சேனாபதியே போற்றி!
குறமகள்மனமகிழ்கோவே போற்றி!

திறமிகு திவ்விய தேகா போற்றி!
இடும்பாயுதனே, இடும்பா போற்றி!
கடம்பா போற்றி கந்தா போற்றி!
வெட்சிபுனையும்வேளே போற்றி!
உயர்கிரிகனக சபைக்குஓர் அரசே!

மயில்நடமிடுவோய் மலரடி சரணம்;
சரணம் சரணம் சரவணபவஓம்,
சரணம் சரணம் சண்முகா சரணம்.

சரணம்சரணம்சண்முகா….சரணம்.

Comments