7 Mukthi Sthalam, Mukthi Sthalangal | Aanmeegam

Mukthi Tharum Sthalangal

  1. திருவாரூர் - பிறக்க முக்தியளிப்பது
  2. காஞ்சிபுரம் - வாழ முக்தியளிப்பது
  3. வாரணாசி (காசி) - இறக்க முக்தியளிப்பது
  4. தில்லை (சிதம்பரம்) - தரிசிக்க முக்தியளிப்பது
  5. திருஆலவாய் (மதுரை) - சொல்ல முக்தியளிப்பது
  6. அவிநாசி - கேட்க முக்தியளிப்பது
  7. திருவண்ணாமலை - நினைக்க முக்தியளிப்பது
மேற்கண்ட முக்தி தலவரிசையை நம்மில் பலர் அறிந்திருப்பார்கள். இவற்றில் காசியை தவிர மற்ற அனைத்தும் தென்னாட்டில் அமைந்துள்ளன. இதனால் தான்,
தென்னாடுடைய சிவனே போற்றி…! 
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!
என்ற முழக்கம் உருவாயிற்று போலும்!

lord shiva 7 mukthi sthalam

🙏 இறைவன் சிவபெருமான் அவதரித்த நட்சத்திரம் திருவாதிரை ஆகும். அதனால் அவருக்கு ஆதிரையான் என்ற பெயரும் உண்டு.

🙏 ஆருத்ரா தரிசனமும் மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் வருகிறது என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது. ஒவ்வொரு மாதமும் வரும் திருவாதிரை நாளில் திருவண்ணாமலை கிரிவலம் செல்வது மிக்க நன்று.

🙏 இது எல்லோராலும் இயலாது. சிவனருள் பெற்றவர்களுக்கே இந்த வாய்ப்பு கிட்டுகிறது. மனதில் உறுதி உடையவர்களுக்கும், பிறந்த ஜாதகத்தில் அல்லது எண்கணிதத்தில் அல்லது கைரேகையில் ராகுவின் பலம் உள்ளவர்களுக்குமே இந்த கிரிவலம் சாத்தியமாகிறது.

🙏 ஒவ்வொரு மாதமும் வரும் திருவாதிரை நாளில் மேற்கண்ட தலங்களில் ஏதாவது ஒன்றிற்கு சென்று இறைவனை வழிபட்டால் நமது கர்மவினைகள் அடியோடு அழிந்து மிகுந்த புண்ணியம் கிட்டும்.

🙏 ஒரு சிலரால் மட்டுமே இது சாத்தியம். அவ்வாறு செய்பவர்கள் மிகுந்த புண்ணியசாலிகள்.

🙏 மேற்கண்ட தலங்களுக்கு செல்ல இயலாவிடில் அதற்காக கவலை கொள்ள வேண்டாம். அருகில் உள்ள சிவதலத்திற்கு குடும்பத்துடன் சென்று சிவபெருமானுக்கு அபிசேகம் செய்து வரலாம். 
  • அர்ச்சனை செய்யலாம்.
  • அன்னதானம் செய்யலாம்.
  • சிவத்தலத்தில் மந்திரம் செபிக்கலாம்.
  • சிவனது மந்திரங்களை கேட்கலாம்.
  • சிவபெருமானின் பெருமைகளை பேசலாம்.
🙏 அவ்வாறு செய்ய இயலாவிடில் சிவபெருமானை நினைத்து கொண்டே இருக்கலாம். இவ்வாறு செய்யும் போது நமது கர்மவினைகள் அடியோடு அழியத்தொடங்கும்.

🙏 மிகுந்த புண்ணியம் கிட்டும். 16 பேறுகளும் கிட்டும். சிவபெருமானின் அருளால் நிம்மதியான வாழ்வு கிட்டும்.

தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!

Comments