Do's & Don'ts of Spiritual Facts in Tamil (Men & Women) - Aanmeegam

Spiritual Facts - DO's and DON'Ts

ஆன்மீக ரீதியில் ஆண்களும் பெண்களும் தெரிந்துகொள்ள வேண்டியவை:

For Men

♂ நாம் உடுத்திய பழைய துணிகளை வீட்டின் கதவுகளின் மீது போடாமல் பார்த்துக்கொள்வோம்.

♂. உடம்பிலிருந்து உதிர்ந்த முடியையும், நகத்தையும், வீட்டில் வைக்காமல் வெளியே (குப்பையில்) எரிந்து விட வேண்டும்.

♂ இரண்டு கைகளாலும் ஒரே சமயத்தில் நம் தலையைச் சொறிதல் நல்லதன்று.

♂ கோவிலுக்கு மற்றும் சுபமங்கள நிகழ்ச்சிக்கு சென்று வந்தவுடன் குளித்தல் தவறு.

♂ சாப்பிடும் உணவை உருண்டையாக உருட்டி சாப்பிடக்கூடாது.

♂ ஈரத்துணியுடன் உணவு அருந்தக்கூடாது.

♂ வபனம் (ஷேவிங் ) செய்து கொள்ளும் முன்பு எதுவும் சாப்பிடக்கூடாது .

♂ தாய் தந்தை உள்ளவர்கள் ஒருபோதும் வெள்ளிக்கிழமையன்று வபனம் (ஷேவிங்) செய்யாமலிருக்க வேண்டும்.

♂ இரண்டு கன்னங்களிலும் கைகளை வைத்துக்கொண்டு நிற்பதோ, உட்கார்ந்து கொள்வதோ கூடாது.

Do's and Don'ts of Spiritual Facts in Tamil

For Women

♀ மஞ்சள் கயிற்றில் மட்டுமே திருமாங்கல்யத்தை கோர்த்து அணிந்து கொள்ள வேண்டும்.

♀ கோவிலில் அங்கப்ரதக்ஷிணம் செய்யக் கூடாது (பெண்களின் மார்பு பகுதி பூமியில் படக்கூடாது).

♀ கோவில்களில் பிரஸாதமாக தரப்படும் துளசியை தலையில் வைத்துக் கொள்ளக்கூடாது.

♀ முந்தானையை தொங்க விட்டு நடப்பது தவறு.

♀ கோவிலில் தெய்வத்தை வணங்கும் பொழுது பின்னங்கால்கள் இரண்டையும் சேர்த்துக்கொண்டு முன் நெற்றி தரையில் படுமாறு மண்டியிட்டு வணங்கவேண்டும்.

♀ தலை குளிக்கும் பொழுது சுமங்கலி பெண்கள் சிறிது மஞ்சளை உரைத்து முகத்தில பூசிக்கொண்டு பிறகு குளிக்க வேண்டும்.

♀ கோலமிடும்போது தெற்கு திசையை தவிர்த்து மற்ற திசைகளில் பார்த்து நின்றுகொண்டு கோலமிட நன்மை பயக்கும் .

♀ திருமணமான பெண்கள் ஒரே ஒரு விரலில் மட்டுமே மெட்டி அணிய வேண்டும். ஒரே காலில் இரண்டு மூன்று மெட்டி அணிய கூடாது; அணிவதால் ஆரோக்கியம் மற்றும் கணவரின் வளர்ச்சி (உடல், வருமானம்) பாதிப்பு அடையும்.

♀ கர்ப்பமான பெண்கள் கோவிலில் உக்கர தேவதைகளை வணங்காமலிருப்பது நல்லது.

♀ கிழக்கு திசையை நோக்கி குங்குமத்தை இரண்டு புருவ மத்தியிலும் உச்சந்தலையிலும் இட்டுக்கொள்ளவேண்டும். திருமணம் ஆகாதவர்கள், உச்சந்தலையில் இட்டுக்கொள்ளகூடாது.

♀ அமாவாசை, தெவசம் ஆகிய நாட்களில் வாசலில் கோலமிடக்கூடாது.

Comments